Tuesday, May 29, 2007

இன்றைய திருக்குறள்

அன்புத்தமிழ் நண்பர்களே வணக்கம்,

சீனத்தமிழர்கள் இணைய மடற்குழு தொடங்கிய நாள் முதல் இத்தகைய தினசரி மின் அஞ்சல் / வலைப்பூ (Blog) ஒன்றையும் தொடங்க வேண்டும் (ஏற்கெனவே, இரண்டு வருடங்களுக்கு முன்னர் வலைப்பூக்கள் எழுதிக்கொண்டிருந்தேன், ஆனால் அது இடையே தடைப் பட்டு விட்டது) என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் வேலை பளு காரணத்தால் இதுநாள் வரை செய்யவில்லை. இப்போது அதைச் செய்யலாமென முடிவெடுத்து, அடுத்த வாரம் முதல் தினமும் ஒரு திருக்குறளை எடுத்துக் கொண்டு, அதற்கு விளக்கம் தரும்படி ஒரு சிறுகதையையும் கொடுக்க முயல்வேன்.

மேலும், மின் அஞ்சலோடு நிற்காமல் அந்த கருத்தை ஒலித்தொகுப்பாகவும் வலையேற்றி சுட்டியை (link) அஞ்சலோடு அனுப்பவுள்ளேன். நண்பர்கள் உங்கள் மேலான கருத்தைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றியுடன்,
வங்கத்தமிழன்