Friday, July 27, 2007

பெண் பெருமை!

அன்பு குழு உறுப்பினர்களே வணக்கம்,
 
சற்றே சுவாரஸ்யமான ஒரு தலைப்பைப் பற்றி எழுதலாமென்று நினைத்தேன், அதுவே கீழ்காணும் அஞ்சலாக உருவெடுத்தது.
 
அது என்னங்க நம்ம எல்லாம் காதுல பூ வச்சவனாப் பாக்குறாங்களா, இல்ல உண்மையிலயே அப்படி பெண்கள் புலியை முறத்தால அடிச்சு விரட்டியிருப்பாங்களா? அந்த காலத்துல புலிகள் அவ்வளவு கேவலமா முறத்தால அடி வாங்கிகிட்டு ஓடுற அளவுக்கா இருந்திருக்கும் என்று ஆசிரியரை மாணவர் கேட்கிறார். நான், சும்மா ஜோக் அடிக்கிறாங்கன்னு நினைக்கிறேன். அதை வேறு பாடத்துல வச்சு படிக்கச் சொல்லுறீங்க, ஐயோ! ஐயோ!! என்று சிரித்து வேறு வைத்தான். ஆசிரியர் மாணவரோடு ஒன்றி பாடம் நடத்துபவராக இருந்ததால் அவன் முதுகு பிழைத்தது.
 
மாமு, அந்த படத்தை பிரம்மாண்டமா செஞ்சிருக்கானுங்கடா. நம்ம தல கொதிச்சுப் போயி கையில சைக்கிள் செயினோட இறங்கி நிக்கிறப்ப காமிரா ஒரு ஆங்கிள் காட்டுறான் பாரு மச்சான், சான்ஸே இல்லடா! அப்படியே ராமாயணத்துல அனுமன் ராவணன் அரசவையில விஸ்வரூபம் எடுத்தாப் போல ஒரு ஃபீல் குடுத்துட்டாண்டா டைரக்டர், என்று சினிமா பார்த்து கெட்டுப் போன நம்மவர்கள் பேசக் கேட்டிருப்போம். ஒரு விஷயத்த மனசுல பதிகிற மாதிரி சொல்ல அசாத்தியமான கற்பனைகள் அந்த காலத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் கையாளப்பட்டு தான் வருதுங்க. அப்படி ஒரு கற்பனை தான் இந்த எழுத்துக்கள் என்றாலும், உண்மையில் பெண்கள் என்னென்ன செய்ய வல்லவர்கள் என்று பார்த்தால், இன்று என்னதான் செய்யவில்லை அவர்கள்? ஆட்டோ, கார், பஸ், பிளேன், ஏன் ராக்கெட் ஏறி விண்வெளிக்கே கூடப் போயிட்டு வந்துட்டாங்க சாமி!  ஒவ்வொரு வருடமும், நம்ம பயலுகள விட அவுங்க தானே அதிகமா தேர்வுகள்ல பாஸ் ஆகுறாங்க. அப்படியிருக்க, இன்றைக்கு முறத்தை எடுத்து ஒரு பெண் அடிச்சா, புலி பயந்துக்கிட்டு ஓடிடுமோ என்னவோ, யாரு கண்டது!
 
அன்புடன்,
வங்கத்தமிழன்

No comments: