Tuesday, April 23, 2013

தமிழ் பதிப்புகள் - மீண்டும் தொடங்க உத்தேசம்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

நான் ஒரு நான்கு ஆண்டு காலம் கல்கத்தா நகரத்தில் அலுவல் காரணம் வாழ்ந்திருந்தேன். அப்போது தமிழில் எழுத வேண்டுமென்ற அவா மிகுதியில் சிங்கப்பூரிலிருக்கும் "ஐயா. மாகோ" அவர்கள் தொடங்கி நிர்வகித்துக் கொண்டிருக்கும் "உலகத் தமிழர் சங்கம்" (Global Tamils) குழுவில் சிறு துணுக்குகள் எழுதத் தொடங்கினேன். கல்கத்தா (வங்காளம்) விலிருந்து எழுதியதால் "வங்கத்தமிழன்" என்று அழைக்கலாமென மாகோ அவர்கள் சொல்ல, அதையே புனைப்பெயராக வைத்து வலைப்பூக்கள் (blog) பதித்து வந்தேன்.

பிறகு சீனா சென்று நான்கு ஆண்டு காலமும் கூட அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தேன். சென்னை திரும்பிய பின் அது நின்று விட்டது. அதை மீண்டும் தொடங்க உத்தேசித்து இறங்குகிறேன், கூடியவரை விடாமல் எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன்.

அன்புடன்,
வங்கத்தமிழன் (ஜெயகாந்த் ராமமூர்த்தி)