அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
- கடவுள் வாழ்த்து; திருக்குறள்
நேர்பட பொருள் கொண்டால் "எழுத்துக்களுக்கு எவ்வாறு 'அ' முதன்மையானதோ, அது போல இவ்வுலகிற்கு முதன்மையானவன் அந்த கடவுள் எனப் பொருள் கொள்ளலாம்.
சரி, சற்றே மாற்றிச் சிந்திப்போம்! எழுத்தரிவித்தவன் இறைவன் என்ற கருத்தைத் தான் வள்ளுவர் இப்படிச் சொல்லியிருப்பாரென்று தோன்றும் நமக்கு.
மொழிக்கு முதன்மையான ' அ'கரம் தொடங்கித் தமிழைக் கற்றுக் கொடுப்பவன் ஒரு மாணாக்கனின் உலகில் (வாழ்வில்) அந்த ஆதிக் கடவுளைப் போல் முக்கியத்துவம் பெறுவான் என்றும் பொருள் கொள்ளலாமே!
ஒரு நாடு முன்னேறத் தடையாக இருப்பது கல்வியறிவின்மை என்பது நிதர்சனமான உண்மை. படித்து முன்னேற வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட பல குழந்தைகள் படிக்க வழியின்றித் தவிக்க, அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோ, அல்லது படிக்க வழிவகைகள் செய்தோ ஊக்குவிப்பவனும் 'எழுத்தறிவித்தவன்' தானே?
நம்மால் முடிந்தவரை நான்கு குழந்தைகளுக்கு படிக்க வசதிகள் செய்து கொடுக்கலாமே!
அன்புடன்,
வங்கத்தமிழன் (ஜெயகாந்த் ராமமூர்த்தி)
பகவன் முதற்றே உலகு
- கடவுள் வாழ்த்து; திருக்குறள்
நேர்பட பொருள் கொண்டால் "எழுத்துக்களுக்கு எவ்வாறு 'அ' முதன்மையானதோ, அது போல இவ்வுலகிற்கு முதன்மையானவன் அந்த கடவுள் எனப் பொருள் கொள்ளலாம்.
சரி, சற்றே மாற்றிச் சிந்திப்போம்! எழுத்தரிவித்தவன் இறைவன் என்ற கருத்தைத் தான் வள்ளுவர் இப்படிச் சொல்லியிருப்பாரென்று தோன்றும் நமக்கு.
மொழிக்கு முதன்மையான ' அ'கரம் தொடங்கித் தமிழைக் கற்றுக் கொடுப்பவன் ஒரு மாணாக்கனின் உலகில் (வாழ்வில்) அந்த ஆதிக் கடவுளைப் போல் முக்கியத்துவம் பெறுவான் என்றும் பொருள் கொள்ளலாமே!
ஒரு நாடு முன்னேறத் தடையாக இருப்பது கல்வியறிவின்மை என்பது நிதர்சனமான உண்மை. படித்து முன்னேற வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட பல குழந்தைகள் படிக்க வழியின்றித் தவிக்க, அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோ, அல்லது படிக்க வழிவகைகள் செய்தோ ஊக்குவிப்பவனும் 'எழுத்தறிவித்தவன்' தானே?
நம்மால் முடிந்தவரை நான்கு குழந்தைகளுக்கு படிக்க வசதிகள் செய்து கொடுக்கலாமே!
அன்புடன்,
வங்கத்தமிழன் (ஜெயகாந்த் ராமமூர்த்தி)
No comments:
Post a Comment