"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"
- கடவுள் வாழ்த்து; திருக்குறள்
வள்ளுவத்தில் சொல்லப்பட்ட பொருட்படி, ஒருவன் என்ன கற்றாலும் என்றும் மாறா உயர்ந்த அறிவு நிலையான கடவுளை வணங்காவிட்டால் என்ன பயன் என்று கொள்ளலாம்.
"வால்" என்ற சொல்லுக்கு, இளமையான, வாலிபமான, களங்கமில்லா அல்லது தனக்கெனத் தனித் தன்மையில்லா / ஊடுருவக் கூடிய (transparent) என்றெல்லாம் பல பொருட்கள் எடுத்துக் கொள்ளலாம். அத்தகைய களங்கமில்லாத, அனைத்துமாகி இருக்கும் இறைவன் தான் எனக்குள்ளும், உனக்குள்ளும், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறான் என்ற அறிவைப் பெறாமல் கற்ற கல்விக்கு என்ன பயன் என்று சற்றே ஊன்றி கவனித்துப் பொருள் கொள்ளலாமோ!
அன்புடன்,
வங்கத்தமிழன் (ஜெயகாந்த் ராமமூர்த்தி)
நற்றாள் தொழாஅர் எனின்"
- கடவுள் வாழ்த்து; திருக்குறள்
வள்ளுவத்தில் சொல்லப்பட்ட பொருட்படி, ஒருவன் என்ன கற்றாலும் என்றும் மாறா உயர்ந்த அறிவு நிலையான கடவுளை வணங்காவிட்டால் என்ன பயன் என்று கொள்ளலாம்.
"வால்" என்ற சொல்லுக்கு, இளமையான, வாலிபமான, களங்கமில்லா அல்லது தனக்கெனத் தனித் தன்மையில்லா / ஊடுருவக் கூடிய (transparent) என்றெல்லாம் பல பொருட்கள் எடுத்துக் கொள்ளலாம். அத்தகைய களங்கமில்லாத, அனைத்துமாகி இருக்கும் இறைவன் தான் எனக்குள்ளும், உனக்குள்ளும், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறான் என்ற அறிவைப் பெறாமல் கற்ற கல்விக்கு என்ன பயன் என்று சற்றே ஊன்றி கவனித்துப் பொருள் கொள்ளலாமோ!
அன்புடன்,
வங்கத்தமிழன் (ஜெயகாந்த் ராமமூர்த்தி)
No comments:
Post a Comment