21 ஜூன் 2004 உலகத்தமிழர் மடல் குழுவிற்கு அனுப்பப்பட்ட அஞ்சல்
கற்பு என்ற நிலை
கற்பு என்ற நிலை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்றார் பாரதி. மனத்துக்கண் மாசிலாத நிலை தான் கற்பு என வரையறுக்கப் பட்டுள்ளது. வள்ளுவர், "கற்றதனாலாய பயனென்கொல் வாலரிவன், நற்றாள் தொழாஅரெனின்" என்று பாடினார்.
கடவுளை வணங்குவதால் மனம் தூய்மையடைகிறது, தூய மனம் மற்றவருக்கு நல்லதையே செய்ய முற்படும். கல்வி கற்பதன் முக்கியத்துவமே மற்றவர்க்கு நல்லன செய்வது தான். ஆகையால் இறைவனை வணங்காதவன், கல்வி கற்றும் பயனில்லை என்கிறார் வள்ளுவர்.
தூய மனமே கற்பு என்ற விளக்கத்தைக் கொண்டால், அந்த நிலையை பெண்களுக்கு மட்டும் (அதுவும் உடல் சம்பந்தப் படுத்தி) வைப்பது எவ்வளவு அறிவீனம்.
வங்கத்தமிழன்
ஜெயகாந்த் இராமமூர்த்தி.
Wednesday, July 14, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment