ஆணை சிவ வடிவமாயும், பெண்ணை சக்தி வடிவமாகவும், சக்தியில்லையேல் சிவமில்லை என்றும் வைத்து, பெண்ணை பெருமைபடுத்தியுள்ளது தமிழ் பண்பாடு. அத்தகைய பெண் சக்தியே இப்போது சக்தியற்று இருக்கிறது தமிழ்நாட்டில். “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே, சேலை உடுத்த தயங்குறியே” என்று பாட்டு கூட வந்துவிட்டதல்லவா? ஒரு ஆணைவிட சக்தி அதிகம் படைத்தவள் பெண். “கண்ணின் கடை பார்வை காதலியர் காட்டிவிட்டால், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்ற பாடல் வரி கூறுவது என்ன. ஒரு ஆணுக்கு கண்ணின் கடைபார்வையால் அத்தகைய மாபெரும் சக்தியை தரவல்ல பெண்ணிடம் எவ்வளவு சக்தி நிறைந்துள்ளது? ஆனால், இந்த பெண் சக்தி ஏனப்பா தவறான வழியில் தடம் மாறிச் செல்கிறது? திரையிலும், தொலைக்காட்சியிலும், எதற்கெடுத்தாலும், எதைப் பார்த்தாலும், குறை ஆடை பெண்கள் இல்லாத நிலையே பார்க்க முடியவில்லை.
மகாத்மா காந்தி அரையாடை உடுத்தி உலகப்புகழ் அடைந்தார் என்பதால், இக்கால பெண்கள் திரையில் குறையாடை பதுமைகளாக காட்சியளிக்கிறார்களோ? இதற்கு சப்பைக்கட்டு வேறு, “என்னங்க செய்ய, அப்படி ஆடை குறைக்க மறுத்தால் வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்வது” என்று. காட்சிப் பொருளாக இல்லாமல், விளம்பரப் பொருளாக இல்லாமல், மேம்பட்டு உலக அரங்கில் முன்னேறி, தங்களுடன் இருக்கும் ஆண்களுக்கு சாதிக்க சக்தியைத் தந்து உலக மேம்பாட்டுக்கு அடித்தளம் அமைக்க வல்ல பெண்ணினமே, “அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்ற பாட்டுக்கு அரசனின் சொற்படி, நீயும் எழுந்து, ஆண்களாகிய எங்களுக்கும் சக்தியைத் தந்து முன்னேற்ற வா.
வங்கத்தமிழன்
Monday, July 26, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment