Thursday, July 29, 2004

ஈகை

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
திருக்குறள்

கொடை என்பது இல்லாத ஒருவர்க்கு, தன்னிடமுள்ள ஒன்றை மனமுவந்து கொடுப்பது. ஆனால் ஒருவனிடம் இருக்கிறது என்று தெரிந்தும் அவனுக்கு ஒன்று கொடுத்தால் அது ஏதோ பிரதிபலனை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவதற்கு ஈடாகும்.

பொன் பொருள் போன்ற போகப் பொருட்களைவிட மிக அத்தியாவசியம் ஒரு மனிதனுக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் தான். பசியில் வாடுபவனுக்கு ஒரு வாய் சோறு கொடுப்பதைவிட உயர்ந்த செயல் வேறொன்றும் இல்லை. அங்ஙனம் பசி என்று வந்து கேட்கும் இறைவனடியார்க்கு கணவன் அருகில் இல்லாததால் அவனுடன் சேர்ந்து உணவு வழங்கி உபசரிக்க வழியில்லையே என்ன கண்ணகி வருந்தியதாக இளங்கோவடிகள் பாடியுள்ளார்.

அப்படி ஒரு தேவையுமில்லாது ஒருவன் கேட்டுப் பொருள் பெறுவது வழிப்பறிக் கொள்ளையைவிட மோசமானது. அப்படி வறிய நிலையில் இல்லாதவனைத் தேடிச் சென்று பொருள் கொடுப்பது கையூட்டுக்கு (லஞ்சத்திற்கு) ஈடானது என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

வங்கத்தமிழன்

No comments: