அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
திருக்குறள்
நல்லறனும், தூய அன்பும் ஒரு இல்லத்தில் இருக்குமாயின், அந்த குடும்பத்தில் நற்பண்பும், வாழ்க்கையின் பயனும் கிடைக்கப் பெறும். இப்போது, இத்தகைய அன்பு, நல்லறனும், நற்பண்புகளும் பல இல்லங்களில் காணப்படாததால் தான் விவாக ரத்து போன்ற பிரச்சனைகள் தினம் தினம் அதிகரித்து வருகிறது.
கணவனுக்கு தகுந்தாற் போல் மனைவி படிந்து போக வேண்டும் என்று கணவன் நினைப்பதும், ஆண் ஆதிக்கம் அதிகமாகிறது, ஆகையால் படிந்து போகக் கூடாது என்று மனைவி நினைப்பதும் தான் பெரும்பாலும் இத்தகைய பிரச்சினைகள் வர காரணம். இவ்வாறு இல்லாது, கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு, இருவரும் சமம் என்ற எண்ணத்தோடு வாழ்க்கையை எதிர்நோக்கினால், “நல்லதொரு குடும்பம், பல்கலை கழகம்” என்ற கூற்றுக்கு ஏற்ப பயனுள்ளதாக அமையும்.
வங்கத்தமிழன்
Saturday, July 24, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment