வாய்மையெனப் படுவது யாதெனில் - யாதொன்றும்
தீமையிலாத சொலல்.
திருவள்ளுவர்
பொய் சொல்லக் கூடாது என்று சொல்லிக் கொடுத்து விட்டு, இது என்ன பொய் சொல்லலாம் என்கிறாரே வள்ளுவர் என்று நினைக்கிறீரா? அவர் என்ன சொல்கிறார், தீமை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் உண்மை போன்றது. படுக்கையில் கிடக்கும் ஒரு மனிதனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கும் போது, கடவுளை நம்புங்கள் என்று மருத்துவர் சொன்ன பிறகு அந்த மனிதனிடம் "ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை, நீ விரைவில் குணமடைவாய், டாக்டரே சொல்கிறார்" என்று சொல்வதில்லையா? அது பொய் தான் என்றாலும், இருக்கும் வரை அந்த மனிதன் நிம்மதியாக இருந்து செல்லட்டுமே என்று தானே அத்தகைய பொய் சொல்கிறோம். வள்ளுவர் அதைத் தான் வாய்மைக்கு ஈடானது என்கிறார். மாறாக, மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார், ஏசு நாதர், நபிகள் நாயகம் எல்லாரும் சொல்லியிருக்கிறார்கள் ஆகையால் நான் உண்மை தான் பேசுவேன் என்று அந்த நோயாளியிடம், "ஐயா, டாக்டர் சொல்லிவிட்டார், நீ சீக்கிரம் போய்டுவேன்னு, மூட்டைய கட்டு என்றால் என்னவாகும்.
ஜெயகாந்த் இராமமூர்த்தி.
Saturday, July 17, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment