செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
திருக்குறள்
சொன்ன நல்ல விஷயத்தினை நல்லவிதமான பொருள் கொள்ளாமல் நாட்டுல போலி சாமியார்கள் நிறைய ஆயிட்டாங்கப்பா. “டேய், அந்த சாமியார் ரொம்ப சக்தி வாய்ந்தவருடா, கண்ணால உத்துப் பார்த்தார்னா ஹோம குண்டத்தில நெருப்பு தானா பத்திக்குது” என்றும், “மந்திரத்துல மாங்கா வர வைக்கிறாரு அந்த மகான்” என்றும் மாங்காய் மகான்களை தினந்தோறும் நாம உருவாக்கிட்டு வரோம்.
இது போன்ற மகான்கள் செய்வதெல்லாம் செயற்கரிய செயலில்லைங்க, இவர்கள் தந்திரமா நம்ம ஏமாத்திக்கிட்டிருக்காங்க. செயற்கரிய என்றால் என்னங்க? அறிவுக் கூர்மையாலும், தொடர்ந்த முயற்சியாலும், ஆராய்ந்து கொள்ளும் திறன் மற்றும் இரக்கத் தன்மை போன்றவற்றாலும் தான் பெரியோர் உருவாகின்றனர். இத்தகைய பெரியோர், அடைய முடியாத உயரங்களைச் சுலபமாக தானும் அடைந்து தன்னுடன் உள்ளவர்களையும் வழி நடத்திச் செல்வர். இப்படிப்பட்ட தன்மைகளில்லாதவர்கள் சிறியர்கள். அவர்களால் வாழ்க்கையில் தானும் முன்னேற முடியாது, மற்றவர்க்கும் முட்டுக் கட்டையாக இருப்பர்.
அன்புடன்,
வங்கத்தமிழன்
Friday, July 23, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment