கருத்துப் பரிமாற்றத்தின் முக்கியத்துவம்
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றதற்கு ஏற்ப, ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தெறிந்தவைகளை மற்றவரோடு பகிர்ந்து கொண்டால் அனைவர்க்கும் நன்மை. நாம் தனி மனிதர்கள் இல்லை, ஒரு சமுதாயத்தில் வாழ்கிறோம், ஆதலால் நம் வெற்றியின் ரகசியத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் சமுதாயம் மேம்படும். சமுதாயம் மேம்படும் போது தனி நபர் நிலையும் மேம்படும், ஆனால் “சமுதாயம் மேம்பட்டால் என் நிலை தாழ்ந்துவிடும்” என்று எண்ணும் ஒரு மனிதன், தன் கருத்துக்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள மறுக்கிறான், அதனால் தன் நிலையையும் மேம்படுத்திக் கொள்ளாமல், சமுதாய மேம்பாட்டிற்கும் உதவாமல், ஒன்றுக்கும் உதவாத நிலையை அடைகிறான்.
இப்படி எடுத்துக் கொள்வோம். உங்களிடம் இரண்டு ரூபாய் இருக்கிறது, என்னிடம் இரண்டு ரூபாய் இருக்கிறது. உங்களிடம் வேண்டி அந்த இரண்டு ரூபாயை நான் பெற்றுக் கொள்கிறேன், இப்போது என்னிடம் நான்கு ரூபாய் உளது ஆனால் உங்களிடம் ஒன்றும் இல்லை. சரி ரூபாய்க்கு பதிலாக நம் இருவரிடமும் தலா இரண்டு நல்ல கருத்துக்கள் உள்ளன. இருவரும் அமர்ந்து கருத்துகளை பரிமாறிக் கொண்டபின் பாருங்கள், இருவரிடமும் தலா நான்கு கருத்துக்கள் அல்லவா இருக்கிறது? அப்படி இருக்க ஏன் கருத்துகளை பரிமாறிக் கொள்ள ஏன் தயங்குகிறான் மனிதன்?
அன்புடன்,
வங்கத்தமிழன்,
(ஜெயகாந்த் ராமமூர்த்தி)
இப்படி எடுத்துக் கொள்வோம். உங்களிடம் இரண்டு ரூபாய் இருக்கிறது, என்னிடம் இரண்டு ரூபாய் இருக்கிறது. உங்களிடம் வேண்டி அந்த இரண்டு ரூபாயை நான் பெற்றுக் கொள்கிறேன், இப்போது என்னிடம் நான்கு ரூபாய் உளது ஆனால் உங்களிடம் ஒன்றும் இல்லை. சரி ரூபாய்க்கு பதிலாக நம் இருவரிடமும் தலா இரண்டு நல்ல கருத்துக்கள் உள்ளன. இருவரும் அமர்ந்து கருத்துகளை பரிமாறிக் கொண்டபின் பாருங்கள், இருவரிடமும் தலா நான்கு கருத்துக்கள் அல்லவா இருக்கிறது? அப்படி இருக்க ஏன் கருத்துகளை பரிமாறிக் கொள்ள ஏன் தயங்குகிறான் மனிதன்?
அன்புடன்,
வங்கத்தமிழன்,
(ஜெயகாந்த் ராமமூர்த்தி)
No comments:
Post a Comment