“நகுதற் பொருட்டன்று நட்டல் - மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு”
திருவள்ளுவர்.
ஃபிகர பாருடா மாமு சும்மா டக்கராகுது, நண்பா ஒண்ணா ஒக்காந்து போற வர ஃபிகர வெட்டலனா இன்னா மச்சி ஃபிரண்ட்சிப், என்று சென்னை தெருக்களில் (பெரும்பாலும் கல்லூரி அருகாமையில்) பிகில் (whistle) விடும் பெருந்தகைகளை நாம் நிறைய பார்த்திருப்போம். இதில் வாயில் மிக style ஆக சிகரெட் வேறு. இவற்றைப் பார்க்கும் போது வள்ளுவர் நட்பைப் பற்றிச் சொன்னது நம் நினைவிற்கு வரும்.
எதுங்க நட்பு? சும்மா கெட்ட வழிகளில் சென்று கும்மாளம் போடுவதா நட்பு? ஒருவன் தவறு நிறைய செய்யும் பொழுது, அவனை இடித்து திருத்தி நல்வழிப் படுத்துவது தான் நட்பு என்றார் வள்ளுவர்.
அன்புடன்,
வங்கத்தமிழன்
(ஜெயகாந்த் இராமமூர்த்தி)
Thursday, July 15, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment