Tuesday, July 27, 2004

“நாவடக்கம்”

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
திருக்குறள்

அடக்கம் என்ற தன்மை ஒருவனை தேவனுக்கு ஈடாக உயர்த்தும் என்பது திருவள்ளுவர் சொல்லிய வாக்கு. அந்த வகையில் அடக்கமுடையவனுக்கு எல்லாவிதத்திலும் சிறப்பு என்று நாம் அறிகிறோம். ஒருவன் தன் நாவைக் கட்டுப்படுத்த வேண்டும் (இந்த இடத்தில் வயிற்றுக்கு ஈயப்படும் பொருளைக் கொண்டு வள்ளுவர் சொல்லவில்லை). நாவடக்கம் என்றால், எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டும் என்று பகுத்தறியும் தன்மை. ஒருவனுக்கு மிகவும் அவசியம் “நாவடக்கம்” அல்லது “சொல்வன்மை”. எதை எங்கே பேசுவது என்று தெரியாது பேசிவிட்டு, பிறகு ஐயோ பேசினோமே என்று வருத்தப் படுவதில் என்ன பலன்?

ஆகையால் ஒரு மனிதன், (இக்கால அரசியல்வாதி போலில்லாமல்) நாவடக்கம் கொண்டவனாக இருந்தால் அவன் பெருமையடைவான், மாறாக வாயில் வந்தபடிப் பேசிவிட்டால், மற்றவரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அசிங்கப்பட்டுப் போவான்

வங்கத்தமிழன்

No comments: