Tuesday, August 03, 2004

மழித்தலும் நீட்டலும்

மழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம்
பழித்த தொழித்து விடின்
திருக்குறள்

மொட்டையடித்துக் கொள்வதோ, ஜடாமுடி வளர்த்துக் கொள்வதோ ஒருவன் இந்த உலகம் பழிக்கும் விஷயங்களை விட்டுவிட்டால் தேவையில்லை.

உலகம் பழிப்பது, சூது/வாது, வஞ்சனை, பொறாமை, அடுத்தவன் குடி கெடுக்கும் மனப்பாங்கு போன்றவை. துறவறம் என்பதை பலர் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர், இல்லையேல் இத்தனைப் போலி சாமியார்கள் எப்படி? “கிக்கு வருதா? கிக்கு வருதா? பிரேமானந்தா” என்ற பாட்டு தான் எப்படி? அன்பே உருவானவர்கள், எல்லோர் மீதும் சமமான அன்பு கொண்டவர்கள், தனக்கென ஒன்றும் வைத்துக் கொள்ளாது, எல்லாவற்றையும் பொதுவென வைப்பவர்கள், தானறிந்த நல்ல விஷயங்கள் எல்லோரும் அறிந்து அதன்மூலம் நன்மையடைய வேண்டும் என்ற மனப்பாங்கு கொண்டவர்கள்தாம், உண்மையில் உலகம் பழித்தது ஒழித்தவர்கள். இவர்கள், தன்னைத்தானே துறவி என்று சொல்லிக் கொண்டு திரிய மாட்டார்கள். இவர்களுக்கு மேற்குறிப்பிட்ட மழித்தல், நீட்டல் போன்ற அடையாளங்கள் தேவையில்லை.

வங்கத்தமிழன்

No comments: