Thursday, August 05, 2004

ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
திருக்குறள்

“பாஷா, பாஷாடா, நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி”. இந்த வசனம் தெரியாத தமிழனே இருக்க முடியாது. இதை மேலோட்டமாகக் கேட்டிருக்கிறோமே தவிர, அதன் உள்ளிருக்கும் கருத்து என்ன என்று புரிந்து கொண்டவர்கள் சிலரே. நான் ரஜினி ரசிகன், திரைப்படத்திற்கு விமரிசனம் எழுதுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள்.

அதாவது, வள்ளுவர் சொன்னது, ஒருவன் சொல்லும் ஒரு சொல்லை ஆராய்ந்து, அதைவிட நல்ல சக்திவாய்ந்த சொல் வேறொன்றுமில்லை என்று அறிந்த பிறகு தான் ஒரு சொல்லைச் சொல்ல வேண்டும் என்கிறார். அதைத்தான் இப்போது, “நாம சொல்றத தான் செய்யறோம், செய்யறத தான் சொல்றோம்” என்றும், “நாம யோசிக்காம பேச மாட்டோம், பேசிட்டு யோசிக்க மாட்டோம்” என்றும் சூப்பர் ஸ்டார் சொல்றாருங்க.

வங்கத்தமிழன்

No comments: