நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ?
ஐந்துதலை பாம்பென்பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார்
மகாகவி பாரதி
ஒரு சண்டையென்று வந்துவிட்டால், அப்பன் மகன் உறவுகூட நிற்பதில்லை. கருத்து வேறுபாட்டால், பெற்று, வளர்த்து, சோறு போட்டு, துணிமணி வாங்கித்தந்து, பாராட்டி சீராட்டிய தந்தையையே எதிர்க்கும் தைரியமும் துணிச்சலும் வந்துவிடும்.
தெருவில் ஒரு சண்டை, ஒரு இளைஞன் (18 வயது மதிக்கத்தக்கவன்) ஒரு ஐம்பது வயது நபரை செங்கற்கள் கொண்டு தாக்க முற்பட, தெருவில் இருந்தவர்கள் அவனை மடக்கி கல்லை வாங்கிக் கீழே போட்டுவிட்டு சமாதானம் செய்கிறார்கள். அவர்களை மீறி அவன், விடுங்கய்யா, “இன்னிக்கு, நானா, அந்தாளான்னு பார்த்துடணும்”னு வருகிறான். மற்றொரு புறம், “ஏண்டா தம்பி, உனக்காக நான் எவ்வளவு செலவு பண்ணியிருப்பேன், ஒரு நூறு ரூபாய் தானே கேட்டேன், அதற்கு இவ்வளவு ஆத்திரமா” என்று அந்த பெரியவர் புலம்புகிறார். இது என்ன சார், ஒரு சிறு விஷயத்திற்கு தந்தைக்கும் மகனுக்குமிடையே பிளவா. இப்படிப்பட்ட பிரிவினைகள் வீட்டு நலனையும், நாட்டு நலனையும் எங்கே கொண்டு நிறுத்தும்? உறவுமுறைகளுக்கு மதிப்பும் மரியாதையும் நம் நாட்டில் தான் இன்னமும் இருந்து வருகிறது. மேலை நாட்டவர், நம்மைப் பார்த்துத் திருந்தும் இத்தருவாயில், நாம் “மாமியாரிலிருந்து கழுதை, கழுதையிலிருந்து கட்டெரும்பு” என்று மாற வேண்டுமா?
வங்கத்தமிழன்
No comments:
Post a Comment