நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்,
சிலர் அல்லும்பகலும் தெருக் கல்லாயிருந்து விட்டு
அதிட்டமில்லை என்று அலட்டிக் கொண்டார்
ஆமாங்க, இவ்வளவு திறமை, புத்தி கூர்மை எல்லாமிருந்தும் நம்ம ஆட்கள் முன்னேறாததற்குக் காரணம் என்ன? “அது சரியில்ல, இது சரியில்ல, அரசியல்வாதி லஞ்சம் வாங்கறாம்பா, அதான் நாடு குட்டிச்சுவறாப் போகுது என்று திண்ணைப் பேச்சில் கரை கண்ட வெட்டி ஆபீஸர்கள் கதையடித்து நேரத்தை வீணடிக்கறாங்க ஒருபுறம். மற்றொருபுறம் என் படிப்புக்கு வெளி நாட்டுல தான் மதிப்பிருக்கு பாருங்க, நான் எப்படி இங்க உட்கார்ந்து காலத்தை வீணடிக்க முடியும்னு பொறுப்பைத் தட்டிக் கழிச்சுட்டு போறாங்க இன்னொரு சாரார் (வெளி நாடு போங்க, நிறைய படிங்க, கத்துக்குங்க, கத்துக் கொடுங்க, இப்போ காலம் மாறிப் போச்சு. எந்த துறையாயிருந்தாலும் மேல் நாட்டோர்க்கு அப்பன் பாட்டனெல்லாம் நம்ம ஆட்கள் எவ்வளவோ இருக்காங்க. ஆகையால், நாம் கஷ்டப்பட்டு ஆராய்ந்து நேரம், நம் உழைப்பு எல்லாவற்றையும் முதலீடு செய்து தயாரித்தவற்றை நம் நாட்டிற்கு எதாவது ஒருவிதத்தில் உபயோகமாக்குங்க. கடல் கடந்து செல்லும் எல்லோரையும் நாம் சொல்லலை. எவ்வளவோ நாட்டுக்காகவும், மொழிக்காகவும் செய்ய்றவங்க நிறைய பேர் இருக்காங்க).
அடுத்தவரைக் குறை சொல்றத முதல்ல நிறுத்தினாலே நாம முன்னேற வழி பிறந்தா மாதிரி தான்னு வச்சுக்குங்க. “என்ன வளமில்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” என்பதை நினைவில் கொள்ளணும். “இந்தியா என்றொரு நாடுண்டு, அது தான் உலகின் அறிவுக் களஞ்சியம்” என்று உலகெங்கும் புகழாரம் சூட்ட வேண்டும் நமக்கு.
வங்கத்தமிழன்
No comments:
Post a Comment