Tuesday, August 17, 2004

கல்லா தவரும் நனிநல்லர்

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
திருக்குறள்

நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் தளும்பும். பல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தவர்க்கு விளம்பரம் தேவையில்லை. அவர்கள் அவையடக்கத்தோடு பணிவாக இருந்தாலும் பெருமை அவர்களைத் தேடித் தானாக வரும். மாறாக, கல்வியறிவில்லாத மனிதர்கள், நானும் இருக்கிறேன். என்னைப் பாருங்கள், என்னைப் பாருங்கள் என்று கூவிக் கூவி விளம்பரம் செய்தாலும் அவர்களை யாரும் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள்.

ஆனால், அப்படி கற்றிராத மனிதன், கற்றவர்முன் ஏதாவது கற்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு, அவர்களிடமிருந்து வித்தைகளைக் கற்க முற்பட்டால், அவனும் கல்வி கற்று உயர்ந்தவனாகவே கருதப்படுவான். கற்க வேண்டுமென்ற ஆவலிருக்கும் போது, குருவே அவசியமில்லாது, தானே ஒருவன் கற்க வழியுண்டு என்பதற்கு “ஏகலைவன்” ஒரு எடுத்துக்காட்டு. அவன் குருவாகக் கொண்டவரிடமிருந்து ஒன்றுமே கிடைக்கப் பெறாத போதுகூட, அவர்முன் அமைதியாக இருந்து, அவரது ஒவ்வொரு செயலிலும் பாடம் கற்று, அந்த குருவே அடைய முடியாத பெயரைப் பெற்றானே!

வங்கத்தமிழன்

No comments: