Friday, August 13, 2004

“சிரிப்பு”

“சிரிப்பு” (செயற்கை மற்றும் இயற்கை)

“துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று
சொல்லி வச்சார் வள்ளுவரும் சரிங்க”

என்ற பாடலை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். ஆரோக்கியமாக வாழத்தேவை நல்ல மனசு. நல்ல மனசுக்கு அடித்தளம் கவலையற்ற நிலை அல்லது கவலையை மறந்த நிலை. கவலையை மறக்கச் சிரிக்கணும்னு டாக்டர் சொல்றாங்க. இப்போ நாடெங்கும் சிரிப்பு கிளப் (laughing clubs) அமைக்கப்பட்டு, தினமும் காலையிலே எல்லோரும் ஒன்றுகூடி விதவிதமா சிரித்துவிட்டு கவலையற்ற ஆன்மாக்களாக புதிய நாளைத் தொடங்க, எல்லாம் நல்லபடியா கைகூடி வருதாம்.

அறிவியல் சொல்வது, “ஒவ்வொரு நிகழ்வுக்கும் (cause), ஒரு பலன் (effect) உண்டு”. சித்தாந்தங்கள் சொல்வது, “பலனை உண்டாக்கு, நிகழ்வு தானாக ஏற்படும்”. நாம் கொண்ட சிரிப்பு உதாரணத்தில், மனசு மகிழ்ச்சியாக இருந்தால், சிரிப்பு வரும். இதில் நிகழ்வு மகிழ்ச்சியாக இருத்தல், அதன் பலன் சிரிப்பு வருவது. இங்கே சித்தாந்தமும் அறிவியலும் கை கோர்த்துக் கொண்டு “பலனாகிய சிரிப்பை உண்டாக்கு, மகிழ்ச்சி தானாக வரும்” என்கிறது. சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு, செயற்கையாக சிரிப்பை வரவழைப்பதைவிட, சிரிப்புத்துணுக்குகள் படித்து, ஹாஸ்ய நாடகங்கள் பார்த்து இயற்கையான சிரிப்பில் மகிழலாமே.
வங்கத்தமிழன்

No comments: