மீக்கூறும் மன்னன் நிலம்.
திருக்குறள்
அக்காலத்தில் பெரும்பாலான மன்னர்கள், அரண்மனைகளில் வசித்து, செல்வத்தில் கொழித்து, வறுமைக் கோட்டிற்கு கீழிருந்த மக்களைப் பற்றிக் கவலைப்படாது, போக வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். ஆகையால், பொதுவாக மன்னனையும், அவன் குடும்பத்தாரையும் தம்மில் ஒருவராக மக்கள் பாவித்தது இல்லை. அவர்களை, உயர்ந்த குடி மக்கள் என்று தள்ளி வைத்து விட்டனர். கௌளதம புத்தர் கதையை படித்தவர்கள் இதை எளிதாக உணர முடியும். சித்தார்த்தன் ஒரு இளைஞனாகும் வரை நாட்டு மக்கள் வறுமை, அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் ஆகியவை பற்றி ஒன்றுமே அறிந்திருக்கவில்லை.
அத்தி பூத்தார்போல் யாராவது ஒரு அரசன் மக்களோடு நெருங்கிப்பழகி அவர்கள் சுகதுக்கங்களில் பங்கு கொண்டால், அவனை அந்த நாட்டு மக்கள் போற்றிப் புகழ்வதோடு, தங்களோடு ஒருவனாக ஏற்றும் கொண்டனர். மேற்குறிப்பிட்ட சித்தார்த்தன், வெளியில் வந்து நாட்டு மக்கள் படும் அல்லல்களைக் கண்டு, மனம் வருந்தி, தன் சொந்தங்கள அனைத்தையும் துறந்து காட்சிக்கெளியனாக, எல்லோரிடமும் அன்பு காட்டும் இன்சொலனாகவும் மாற புத்தர் பிறந்தார். பார்க்கத் துறவியாக இருந்தாலும், எல்லோராலும் ஒரு மன்னனைவிட உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டு தலைவனாக புத்தர் ஏற்றுக் கொள்ளப் பட்டாரல்லவா?
வங்கத்தமிழன்
No comments:
Post a Comment