நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு
திருக்குறள்
ஒரே அறையில் கதவுகளைத் தாளிட்டு, சாளரங்களையும் (ஜன்னல்களை) அடைத்து, ஒரு விளக்குமில்லாது, ஒரு நாள் முழுவதும் இருக்கச் சொன்னால் இருப்பீர்களா? கையை காலை அசைத்து, நான்கு வேலைகள் செய்து, மற்றவர்களோடு உரையாடி, உறவாடி இல்லாமல் சிறை பட்டது போல் யாரால் தான் இருக்க முடியும்? இதே நிலை தான் செல்வத்திற்கும் (பொருளுக்கும்). செல்வம் ஓரிடத்தில் அடைந்திருக்க விரும்பாது. எப்போதும் புழக்கத்தில் இருப்பது தான் செல்வத்தின் இயல்பு. அதை முடக்கி வைப்பதால் தான் இப்போது பணவீக்கம் போன்ற பிரச்சினைகள் வருகின்றன.
சரி, அதற்கும் மேற்குறிப்பிட்ட குறளுக்கும் என்ன சம்மந்தம் என்கிறீரா? இக்குறளில் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார்? நல்லவர்கள் அனுபவிக்கும் வறுமையைவிட, அறிவிலிகளிடம் உள்ள செல்வம் மிக்க துன்பம் தரும் என்கிறார். நல்லவர் எப்போதும் பிறருக்கு கொடுத்து மகிழ்ச்சியடைவர், ஆகையால் அவர்களுக்கு வறுமை ஏற்பட்டால், பிறருக்குக் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவர்களுக்கு மட்டும் தான் வரும். ஆனால், முட்டாளகளிடம் அடைபட்ட செல்வத்தை செலவு செய்ய வழிவகைகள் தெரியாது, அந்த முட்டாள்கள் துன்பமடைவதோடு, அடைபட்டுக் கிடக்கும் செல்வமும், நல்லவர்க்கு பயனாக நாம் இருக்க வழியில்லையே என துன்பமடையும் என்று கூறுகிறார் போலும் வள்ளுவர்.
வங்கத்தமிழன்
Monday, August 16, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment