அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
திருக்குறள்
எல்லாவுயிர்களிடமும் களங்கமிலா அன்பு காட்டுபவர் அந்தணர் எனப்படுவர். பிறப்பினால் எல்லா உயிர்களும் ஒன்று தான். அப்படிப் பிறக்கும் போது ஏதாவது குறைபாடோடு பிறந்தால், அவர்களிடம் மேலும் அன்பு காட்ட வேண்டியது மிக அவசியம்.
அத்தகைய களங்கமிலா, மாசிலா அன்பை எல்லோரிடமும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் காட்டி, தான் அறிந்த வித்தைகள் அனைத்தையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து தாய் / தந்தையர்க்கு ஈடாக அவர்கள் மேம்பட எவன் ஒருவன் உழைக்கிறானோ, அவனே அந்தணன் எனக் கூறிக் கொள்ளத் தகுதியுடையவன். அன்பு காட்டுவதில் தாயைவிட சிறந்த ஒரு உதாரணம் காட்ட முடியாது, கல்வியறிவித்தலில் தந்தையைவிட வேறு உதாரணம் இல்லை. ஆகையால், அந்தணத்துவத்தை ஒரு சாதி சார்ந்த சொல்லாகக் கொள்ளாமல், எல்லா உயிர்களுக்கும் தாயும், தந்தையுமாய் அன்பு காட்டி அருள் பாலிக்கும் மனிதர்தாம் அந்தணத்துவம் அடைகின்றனர் என்று கொள்ள வேண்டும்.
வங்கத்தமிழன்
Saturday, August 21, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment