Wednesday, August 25, 2004

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
திருக்குறள்

நல்லவன் போல மற்றவரை ஏமாற்றித் திரியும் மனிதனைப் பார்த்து, அவனுக்குள் இருக்கும் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற பஞ்சபூதங்கள் தமக்குள்ளேயே சிரித்துக் கொள்ளுமாம்.

எல்லோரையும் ரொம்ப சாமர்த்தியமாக ஏமாற்றிக் கொண்டு வருகிறோம், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டு மற்றவர்முன் மிக நல்லவன் போல நடித்து போலியாக வேடமிடுபவர்களுக்குத் தெரியாதது என்னவென்றால், ஆண்டவன் அவர்கள் தீய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், அவன் நிச்சயம் அதற்கான தண்டனையைக் கொடுப்பான் என்பது தான். ஒவ்வொரு உயிரும், மேற்குறிப்பிட்ட பஞ்ச பூதங்களாலானதால், அந்த பஞ்சபூதங்கள் இந்த நிதர்சனமான உண்மையை இந்த மனிதன் உணராமல் இப்படி ஏமாற்றித் திரிகிறானே என்று எள்ளி நகையாடுமாம்.

வங்கத்தமிழன்

1 comment:

appan ganapathy said...

ayya vanakkam pala kodikal.
ungalathu uruthunaiyalum ennudaya muyarchiyalum
"gautam.blogspot.com" l naanum nuzaindhu vitten.
atis ungalathu padaipai copy seythu pottu vitten.
mannikkavum.

ithu oru trial than. meendum nihazaathu.

"vaazkkai" ganapathy